states

img

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் முகமது யூசுப் தாரிகாமி வேண்டுகோள்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் நகரில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இளைஞர் மாநாட்டில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், குல்காம் தொகுதி சிபிஎம் வேட்பாளரு மான முகமது யூசுப் தாரிகாமி பேசினார். அவர் பேசுகையில், “உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகா ரத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. ஒன்றிய அரசின் சொல்லும் செயலும் வெவ்வேறானவை. அதனால் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக நிற்க வேண்டும். மதச்சார்பின்மை மற்றும் காஷ்மீர் மக்க ளின் உரிமைகளைப் பாதுகாக்க தலை வர்களும், ஊழியர்களும் ஒன்றுபட வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.